சென்னை: தமிழ்நாட்டில் 14துணை மின் நிலையங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும்  8 துணைமின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ. 373.22 கோடி செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களையும், ரூ. 91.57 கோடி செலவில் 57 துணை மின் நிலையங்களில் 723 எம்.வி.ஏ அளவிற்கு உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை  தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து,  ரூ. 130.18 கோடி மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.