சென்னை: இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடுத்தக்கட்டமாக, திண்டுக்கல் பகுதியில், முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாம் திண்டுக்கல் தோட்டனுாத்துவில்  அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மறுவாழ்வு முகாமில்,  ரூ.17 கோடியே 17 லட்சம் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 321 புதிய வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தோட்டனுத்து, அடியனுத்து, கோபால்பட்டி ஆகிய 3 முகாம்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைத்து இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இலங்கை தமிழர்கள் நிரந்தர குடியிருப்பு குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் தற்போது கருத்து நிரந்தர குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது.