சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

92வயதாகும் தயாளு அம்மள் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வுபெற்று வந்த நிலையில்,  கோபாலபுரம் இல்லத்தில் இன்று  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. இதன் காரணமாக,  சென்னையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தயாளு அம்மன் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மூச்சத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்து பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலப் பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.