சென்னை: மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டியில் இன்று நடைபெறும்கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டில், இன்று கிராம சபை கூட்டத்தை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது 9மாவட்டங்களில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில்  நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளத.

கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு செல்கிறார்.  முதல்வராக பதவி ஏற்றபிறகு 2வது முறையாக மதுரை செல்லும் முதலமைச்சருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.