சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் மறைந்த திருமகன் ஈவெரா உருவப்படம்  மலர்களால் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ள  நிலையில், கடந்த வாரம் திடீரென  ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சியினரும் அஞ்சலிசெலுத்தினர்.

இந்த நிலையில், இன்று  நடப்பாண்டில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது. முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில்  மறைந்த திருமகன் ஈவேரா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி எம்எல்எக்கள் என பலரும்,  திருமகன் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.