சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை காமராஜர் சாலை ராணிமேரிக் கல்லூரியில் நடைபெற்ற  இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மாணவியின் விருப்பப்படி அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து  அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர்  கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு  திடீரெனறு ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அலுவலகத்தில்  பணியாற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.  அலுவலர்களிடம் வேலை தொடர்பாக கேட்றிந்தார். பின்னர் அலுவலகம் முழுவதையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அங்கு வந்திருந்த பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.