சென்னை: ஆஸ்கர் விருது குழுவில் இடம்பெற்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.  ‘வானமே எல்லை’ – தம்பி சூர்யாவுக்கு பாராட்டுக்கள் என டிவிட் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா ஆஸ்கர் விருது குழுவின் அறிவியல் பிரிவில் உறுப்பினராக சேர அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இதற்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.  அதில்,  ‘தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!’

“விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.