சேலம்: 
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ஆ.ராஜா என்கிற ராஜேந்திரன் (58). அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அவரை சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வீரபாண்டி ராஜாவின் உடல் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  வீரபாண்டி ஆ. ராஜாவின் உடலுக்கு அஞ்சலி நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.