சென்னை:
போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்நடைபெற்று வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க தமிழக சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.