மதுரை: தென்மாவட்டங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைகக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அருங்காட்சியைகத்தை சுற்றி பார்த்தார்.

இதுகுறித்துடிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த இனமாம் நம் தமிழினத்தின் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன். கீழடியின் வயது 2600. தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில்! ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள். வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம் என்றுபதிவிட்டுள்ளார்,.

கீழடியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியத்தில் இங்கு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. 8 கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 8 கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள்  அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

முன்னதாக களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 5ந்தேதி)  மதுரை சென்றுள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், அருங்காட்சி யகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றிலும் பார்வையிட்டார்.