சென்னை:  அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் விசிக தலைவர் திருமாளவளவன் கலந்துகொண்டார்.

தமிழக சட்டப்பேரவையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலைக்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் 13 அடி அம்பேத்கர் வெண்கல சிலையானது மணிமண்டபம் நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு சாலையை பார்த்தவாறு வைக்கப்பட்டுள்ளது.   இந்த   திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

இந்த விழாவில், திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்