தஞ்சாவூர்:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்மீது மர்ம நபர் யாரோ செருப்பை வீசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மர்ம நபர் வீசிய செருப்பு அதிர்ஷ்டவசமாக எடப்பாடி மீது படாமல், வேனில் மீது விழுந்தது. ‘

‘தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு,

இரவு 9 மணி அளவில் த.மா.கா. வேட்பாளர் என் ஆர். நடராசஜனை ஆதரித்து ஒரத்தநாட்டில் வாக்கு சேகரித்து வேனில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது,  திடீரென மக்கள்கூட்டத்தில் இருந்து  ஒரு செருப்பு பறந்து வந்த எடப்பாடியின் வேன்மீது விழுந்தது. இதன் காரணமாக சில நிமிங்கள் பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக எடப்பாடி அதிர்ச்சி அடைந்தார்.

செருப்பு வீசிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

எடப்பாடி பேசிக்கொண்டிருக்கும் போது வேன்மீது செருப்பு வந்து விழும் வீடியோ…