டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் கமிஷனின்  24-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா ஏப்ரல் 13ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம்  2022-ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. இவர், நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மீதமுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து  தலைமை தேர்தல் ஆணையல்  சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருவரும் கொரோனா சோதனை மேற்கொண்டனர். அதில், அவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.