சென்னை

மிழக தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இரண்டாம் நாளாக நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிவடைய உள்ளதால் இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பரப்புரையை தொடங்கி உள்ளன.   தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரசாரக் களம் சூடு பிடித்துள்ளது.

தேர்தல் தேதிகளை முடிவு செய்ய சென்னையில் உள்ள தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது.  அகில இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்த  ஆலோசனைக் கூட்டத்தை நேற்று முதல் நடத்தி வருகிறார்.

இன்று இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் சுனில் அரோராவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை சந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  இன்று மதியம் இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு தேர்தல் தேதிகள் குறித்துத் தெரிய வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.