சிதம்பரம்:
குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பூஜை செய்து வருகின்றனர். அவர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சில தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் இருவரை கடலூர் மாவட்ட சிறப்பு படைப்பிரிவு போலீசார் விசாரணைக்காக சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் சுமார் 100 பேர் திடீரென கீழவீதியில் உள்ள கோயில் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.