சென்னை:
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்கல்விதுறையின் கீழ் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த கல்லூரில் அரசு கல்லூரியை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் தொடர்ந்து போட்டம் நடத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் இனி இங்கேயும் வசூலிக்க நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.