சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கொலை விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து, நடராஜரின் அருளாசி பெற்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம்  விழா நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்றது.  இங்கு சிவபெருமான் தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் ஆருத்ரா தரிசனத்தை காண பல லட்சம் பேர் சிதம்பரம் வருகை தந்து நடராஜன பெருமானை தரிசித்து ஆசி பெற்று செல்வர்.

இந்த ஆண்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா உற்சவம் ஆனது கடந்த 28ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. தினந்தோறும் இறைவன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்து வந்தார்.  ஆருத்ரா தரிசனம் நாளை (6ந்தேதி) நடைபெறுகிறது.  இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று காலை  சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்  தொடங்க்  நடைபெற்று வருகிறது.  நடராஜர் ,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும்,  தனித்தனி தேர்களில் வீதிகளில் வலம் வருகின்றனர்.  இதனால்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்து, நடராஜர் அருள் பெற்று வருகின்றனர்.

பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்ததருளி அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை மாலை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 நாளை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற உள்ளது . இதைத் தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறும்.  அத்துடன் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம்,  ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது. இந்த விழாவானது ஜனவரி 7ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலா உடன் முடிவடைகிறது.

சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் நடராஜர் கோயில் மற்றும் மாடவிதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.