பனாஜி:
த்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” என்று   முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சிதம்பரம், பனாஜியில் இன்று நடைபெற்ற இந்திய இளைஞர் காங்கிரஸின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய அவர், “மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பகல் கொள்ளை என்றும்,  கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட அனைத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் கைகளில் வழங்கப்படுகிறது. மக்கள் இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, எதிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.