சென்னையில் நடைபெற இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார், இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னையில் நடைபெறும் சதுரங்க போட்டியை துவக்கி வைக்க ஆவலுடன் இருப்பதாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் “செஸ் எனக்கு மிகவும் பிடித்த உள்ளரங்க விளையாட்டு. செஸ் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.