கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த சேரன்: வரவேற்போம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை… இதை நாம் முழுமையாகப் பின்பற்றவில்லையென்றால் இத்தாலி நிலைமைதான் நமக்கும். இத்தாலி மக்கள் படும் அவஸ்தையை கண்முன் கண்டும் நாம் அலட்சியமாக இருந்தால் விளைவு விபரீதம்தான். தனித்திருத்தல்.. SOCIAL DISTANCING.. ஒன்றே வழியும் தீர்வும்…என பதிவிட்டுள்ளார் .