சென்னை:
சென்னையில் நாளை மலர் கண்காட்சி தொடங்கப்பட உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில் முதல் முறையாக சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து துவக்கி வைக்க உள்ளார்.

பல்வேறு விதமான மலர்கள் இடம் பெற உள்ள இந்த மலர் கண்காட்சி வரும் ஜூன் ஐந்தாம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.