சென்னை

பொங்கல் பண்டிகை அன்று  சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளன.

புறநகர் மின்சார ரயில்கள் சென்னை பெருநகரத்தோடு புறநகர்ப் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சேவையாகும்  இது குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால் அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது.

மின்சார ரெயில் சேவையை நாள தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

,வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது சென்னை – அரக்கோணம், சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.