சென்னை: நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு காரணிகள் அடிப்படையில் இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வாகி உள்ளது.

‘நம்பியோ’ என்ற  தனியார் நிறுவனம் நடத்திய பெண்களுக்கான பாதுகாப்பு நகரங்கள் குறித்த ஆய்வில், இந்தியாவில் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தைகூகுள் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக உள்ள லேடன் அடமோவிக், செர்பியா நாட்டின் போஸ்னியா-ஹெர்சகோவினா பகுதியில் உள்ள பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு, அந்த நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். அந்த நிறுவனமானது பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பாக உணர விரும்புகிறார்கள். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், அது வேலை செய்யும் பெண், இல்லத்தரசி, கல்லூரி மாணவர் அல்லது பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான இடம் மிகவும் முக்கியமானது.

எனவே, சமீப காலங்களில் ஆன்லைனில் அதிகம் தேடப்படும் தலைப்புகளில் ஒன்றாக ‘இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்’ என்ற வார்த்தை மாறிவிட்டது, குறிப்பாக வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு வீடு தேடும் பெண்கள் மத்தியில். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இன்னும் விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் தங்குவதற்கு அல்லது குடியிருப்பை வாடகைக்கு எடுத்து அவர்களின் தனிப்பட்ட, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியைத் தொடர, இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்கள் சிலவற்றைத் தொகுத்து வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  பாதுகாபான மெட்ரோ நகரங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் சென்னை மாநகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.  சர்வதேச அளவில் பார்க்கும்போது சென்னை 127வது இடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து மேலும் 3 நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மும்பை 161வது இடத்திலும், கொல்கத்தா 174வது இடத்திலும், டெல்லி 263வது இடத்திலும் உள்ளது.

நடப்பாண்டு தொடக்கத்தில் அவதார் எனப்படும் திறமை உத்தி ஆலோசனை நிறுவனம்  எளிமையான வாழ்வு, பாதுகாப்பு, பெண்களின் பிரதிநிதித்துவ விகிதம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகள் உள்ளிட்ட 5 அளவுகோல்களின் அடிப்படையில்  நடத்திய ஆய்விலும்,  அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களின் பட்டியலில், 78.4 புள்ளிகளுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பேசிய மாநக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “ சென்னை மாநகராட்சியை அதன் குடிமக்களுக்கு இன்னும் பாதுகாப்பானதாக மாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக தொடர்ந்து கடினமாக உழைக்கப் போகிறோம். மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த காவல்துறை தன்னை அர்ப்பணித்துள்ளது” என கூறினார்.