சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார்   18,971 போலீசார் வாக்களிக்க  தேவையான  ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் செய்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு வரும் 23-ம் தேதி நடை​பெறுகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு​வீச்​சில் செய்​துள்​ளது.முதல் கட்​ட​மாக தபால் வாக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. ஏற்கனவே முதியோர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தபால் வாக்கினை செலுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்றுமுதல் இரண்டு நாள், சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் தேர்​தல் பாது​காப்பு மற்​றும் இதர பணி​களில் உள்ள போலீ​ஸார்  தபால் வாக்​கு​களைப் பதிவுசெய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி சென்​னை​யில் 18,971 போலீ​ஸார் தங்​களது வாக்​கு​களை இன்று பதிவுசெய்ய உள்​ளனர். இவர்​களுக்கு தபால் வாக்​களிப்​ப​தற்​கான படிவம் ஏற்​கெனவே வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்காக,  சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் காவலர்​களுக்கு தனித்​தனி​யாக சிறப்பு வாக்​குப்​ப​திவு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அந்​தந்த தொகு​திக்கு உட்​பட்ட காவலர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட மையங்​களுக்கு நேரில் சென்று தங்​களின் அடை​யாளச் சான்​றுகளைக் காட்டி தபால் வாக்​கு​களை பதிவு செய்​ய​லாம்.

இந்த வாக்​குப் பதிவு நடை​முறை​கள் அனைத்​தும் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​களின் நேரடி மேற்​பார்​வை​யில் நடை​பெற உள்​ளன. மேலும் வாக்​குப் பதிவு​கள் அனைத்​தும் சிசிடிவி கேம​ரா​வில் முழு​மை​யாக பதிவு செய்​யப்பட உள்​ளது.

“போலீ​ஸாரின் தபால் வாக்​கு​கள் 100 சதவீதம் நடை​பெற வேண்​டும். எனவே அனைத்து காவலர்​களும் தவறாது வாக்​களிக்க வேண்​டும்” என சென்னை காவல் ஆணை​யர் அபின்​ தினேஷ் மோடக்​ அறி​வுறுத்​தி​யுள்​ளார்​.

[youtube-feed feed=1]