சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர், இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு  ஜனாதிபதியின் காவல் பதக்கமும், 17 காவல்துறையினர்களுக்கு  இந்திய காவல் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், இன்ஸ் ஸ்பெக்டர் மணிகண்ட பிரபு ஆகிய 3 பேருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு  உள்பட 17 காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.