சென்னை: தீபாவளியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 2 நாட்கள்  நள்ளிரவு 12மணி வரை நீட்டிப்பு செய்யப்படும் என அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளி யில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் 2 நாட்களுக்கு மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் மேற்குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டுமே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.