சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார்.

பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய வகை அர்ஜுன் கவச வாகனத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி துவங்கி வைக்கும் மெட்ரோ ரயிலை ரீனா ஆறுமுகம் என்ற பெண் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.