சென்னை: சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள  கண்ணகி சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.

சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி,. சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி காலடியில் மலர் தூவி வணக்கம் செலுத்தினார். அவருடன் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும் மேயர் பிரியா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் வேலு மற்றும் தமிழ்வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.