சென்னை

சென்னை மேயர் பிரியா மாநகராட்சி பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் சென்னை மேயர் பிரியா சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  இதில் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளில்  திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக கலந்தாய்வு நிகழ்த்தி உள்ளார்.  அவரை ஐரோப்பிய பள்ளிகளில் காணப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த மாணவர்களின் அறிவு கவர்ந்துள்ளது.

இந்த பயணத்தின் போது ரோமில் உள்ள உர்பேசர்  சர்வதேச திடக்கழிவு மேலாண்மை ஆலை மற்றும் பிரான்சில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை ஆகியவற்றைப் பார்வையிட்ட மேயர், ஈரமான மற்றும் உலர் கழிவுகளைப் பதப்படுத்த பயன்படும் தொழில்நுட்பம் மற்றும் கடற்படை மேலாண்மை பற்றியும் கற்றுக்கொண்டார்.

சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி பள்ளிகளின் பாடத்திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் மற்றும் அது குறித்த ஆய்வைச் சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இது சென்னைவாசிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அவர்கள்,

”ஐரோப்பிய பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் அவற்றை எப்படி கடைப்பிடிப்பது என்பது குறித்து நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். சென்னையிலும் கூட 2019 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சி, தனது பைலட் ஆய்வின் ஒரு பகுதியாக 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்காக பிரத்தியேகமாகப் புத்தகங்களைக் கூட தயாரித்தது. ஆனால், எடுத்துக் கொண்ட ஆய்வின் அடுத்தகட்டமாக அது மேலும் விரிவாக்கப்படவில்லை என்பதே அதிலுள்ள முக்கியமான குறைபாடு”

எனக் கூறி உள்ளனர்.