சென்னை

சென்னை ஐஐடி மாணவியர் விடுதியில்  ஒரு மாணவி தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஐஐடியும் ஒன்றாகும்.    பல மாநிலங்களை சேர்ந்த மாணவி மாணவிகள் இங்கு கல்வி  பயின்று வருகின்றனர்.   இவர்கள் இதே வளாகத்தில் உள்ள மாணவர் விடுதி மற்றும் மாணவியர் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்டை சேர்ந்த மாணவி ரஞ்சனா குமாரி.   சுமார் 25 வயதாகும் இவர் சென்னை ஐஐடி யில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் படித்து வருகிறார்.   பி.எச்டி படித்து வரும் இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் தங்கி கல்வி பயின்றி வருகிறார்.

ரஞ்சனா குமாரி தினமும் தனது  பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசுவது வழக்கமாகும்.    ஆனால் அவர் இரு தினங்கலாக அவர்களுடன் பேசாமல் இருந்துள்ளார்.  இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சென்னை ஐஐடி நிர்வாகத்துக்கு  இது குறித்து தகவல் அளித்தனர்.

அதை ஒட்டி ஐஐடி ஊழியர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்த போது கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.   கதவை தட்டியும் பதில் வராததால் கதவை உடைத்து திறந்த போது ரஞ்சனா குமாரி தூக்கில் பிணமாக தொங்கியது கண்டறியப்பட்டுள்ளது.   அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சென்னை ஐஐடி வளாகத்துக்குள் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.