சென்னை

ரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து மீண்டும் சென்னை – ஹாங்காங் இடையே விமானச் சேவை தொடங்க உள்ளது.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு ‘கேத்தே’ பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.

பிறகு கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன.  ஆயினும் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் விமானச்சேவை விமான நிறுவனம், மீண்டும் விமான சேவையை வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்க தொடங்குகிறது. விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை – ஹாங்காங் நேரடி விமான சேவை, தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.