சென்னை:

ண்டாள் சர்ச்சையில் வைரமுத்துக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் பாரதிராஜா, எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள் என்று எச்சரித்தார்.

பாரதிராஜாவின் வன்முறை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  இந்துமக்கள் கட்சி பிரமுகர் வி.ஜி.நாராயணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இநத மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ்,  புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செயது விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீண்டும் குற்றப்பரம்பரை என்ற பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்; மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்  ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா பேச்சு…. (முந்தைய செய்தி)

https://patrikai.com/wp-admin/post.php?post=774330&action=edit