சென்னை,

ன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கார்த்தி சிதம்பரம் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அவர் வெளிநாடு செல்ல முடியாதபடி, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பிரிட்டனுக்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தன்மீதான வழக்கை சென்னைக்கு மாற்றவும் கோரியிருந்தார்.

இதையடுத்து கடந்த 31ந்தேதி வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றிய உச்சநீதி மன்றம்,  கார்த்தி சிதம்பரம் கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என தெரிவித்தது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பிப்ரவரி 14ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளதால்,  விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது