சென்னை: மெட்ராஸ்  உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கும் தசரா பண்டிகையையொட்டி 11 நாட்கள்  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை (11 நாட்கள்) சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

12ஆம் தேதி செவ்வாய் அன்று விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும்.

அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், அப்துல் குத்தூஸ், எஸ்.சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், எஸ்.ஆனந்தி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பர். அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை விசாரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது” அதற்காக  11ம் தேதி அன்று அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.