சென்னை: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நாள் நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடப்பாண்டு,  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நாள் நிறுத்தி வைக்க உத்தவிட்டுள்ளது நிதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசின்  பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு தர அனுமதி உத்தரவு நடப்பாண்டுக்கு பொருந்துமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.