சென்னை: கேரளாவில் நடைபெறும் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக சென்னை குருவாயூர் ரயில் இயக்கத்தில் 2ந்தேதி முதல் 18 வரை சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்க ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னையில் இருந்து, விபப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும்  மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வேறு அறிவித்து உள்ளது.

கேரளாவில் உள்ள ரயில் வழித்தடமான  கொல்லம்-கோட்டயம்-ஈட்டுமண்ணூர், எர்ணாகுளம்-திருச்சூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக வந்த வழியாக இயக்கப்படும்  குருவாயூர் ரயில் உள்பட சில ரத்து செய்யப்பட்டதோடு மாற்று வழியிலும், தாமதமாகவும் இயக்கப்பட உள்றளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.