சென்னை

ற்போது சென்னை கடற்கரை – வேலூர் இடையே செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினசரி சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு பாஸ்ட் உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.\

தினமும் வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்கு சென்றடையும். அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்கு செல்லும்.

மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.  தொடர்ந்து வேலூர் ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும்.