எனது படத்தில் பணி  புரிந்தால் வாய்ப்பு மறுப்பு : பா ரஞ்சித் பேச்சு

பா ரஞ்சித் இயக்குநராக அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானார்.  இதில் தினேஷ் மற்றும் நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.  அடுத்து அவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி ஆகின.  ரஞ்சித் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக ஆகி உள்ளார்.

ரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார்.   ஏற்கனவே இவர் தயாரித்த பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.   தற்போது அவர் தயாரிப்பில் ரைட்டர் என்னும் திரைப்படம் உருவாகி உள்ளது.  ரஞ்சித் இடம் உதவிய இயக்குநராக பணியாற்றிய பிராங்கிளின் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மகேஸ்வரி, இனியா உள்ளிடோர் நடித்துள்ளனர்.   இசையை 96 படப் புகழ் கோவிந்தா கவனிக்க சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ளார்.  இந்த படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இன்று இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.  இதில் பா. ரஞ்சித் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் தனது படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மற்ற படங்களில் வாய்ப்பு அளிக்க மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.  இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.