சென்னை:
மிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், திருச்சி, நாகை, தஞ்சை, திருவண்ணாமலை, வேலுார்,அரியலுார், பெரம்பலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பேயை வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.