சென்னை:
மிழகத்தின் 6 மாவட்டங்களில்  மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெயக்கூடும் எனவும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.