சென்னை:
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், க்ரைக்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.