சென்னை:
மிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில்நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை.மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இன்று நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.