சென்னை:
மிழகத்தின் 27 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின்நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை.
கடலுார், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய, 27 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.