நடிகையும் முன்னாள் பிக் பாஸ் கன்னட போட்டியாளருமான சைத்ரா கூட்டூர், தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஃபினாயில் உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மண்டியாவைச் சேர்ந்த நாகர்ஜூன் என்ற தொழிலதிபரை மணந்தார். இருப்பினும், கணவரின் குடும்பத்தினர் தங்கள் திருமணத்தை ஏற்க மறுத்ததால், சைத்ரா ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.