மராவதி

ன்று முதல் ஆந்திர மாநிலத்தில் வீடுகளுக்குச் சென்று 11 வகையான சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அமலாகிறது.

இன்று முதல் ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு, ‘ஜெகன் அண்ணனுக்குச் சொல்வோம்’ என்ற திட்டம் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. அத்துடன் ’ஜெகன் அண்ணா சுரக்‌ஷா திட்டம்’ என்ற மற்றொரு புதிய திட்டமும் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இதில் ஜெகன் அண்ணனுக்குச் சொல்வோம் என்ற திட்டம் மூலம் நிறை குறைகளை வீடு வீடாகச் சென்று எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் கேட்டறிய உள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறும் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டுமென முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தி உள்ளார்.

இன்று முதல் அமலாகும் ஜெகன் அண்ணா சுரக்‌ஷா திட்டம் மூலம் ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் வருவாய் அதிகாரிகள் சென்று, பிறப்பு, ஜாதி, இறப்பு, வருவாய் என 11 வகையான சான்றிதழ்களுக்குப் பதிவு செய்தோரிடம் நேரில் சென்று ஆய்வு செய்து அந்த இடத்திலேயே சான்றிதழ் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி புதிய கம்ப்யூட்டர்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக பொது மக்களிடையே வாங்கப்படும் சர்-சார்ஜும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 11 சான்றிதழ்களும் அதற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.