க்னோ

ங்கள் நோக்கத்தை முதலில் தெளிவு படுத்திய பிறகு எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

இன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளை விமர்சித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகப் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவதை மனதில் கொண்டு, மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அந்த எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கத்தை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

எவ்வளவு காலத்துக்குத்தான் தேன் ஒழுக பேசுவீர்கள்? வெற்றி பெறுவதற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகள் முக்கியமானவை. ஆனால், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையைப் பார்த்தால், அவர்கள் இதில் தீவிரமாகவோ, அக்கறையுடனோ இருப்பதாகத் தெரியவில்லை.

எவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற தெளிவு இல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா?   வறுமை, பணவீக்கம், வேலையின்மை, சாதி ஏற்றத்தாழ்வு நிலவும் நாட்டில், அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த சமத்துவமான, மனிதாபிமான அரசியல் சட்டத்தை முறையாக அமல்படுத்தும் திறன், பாஜகவுக்கோ, காங்கிரசுக்கோ இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், பாட்னா கூட்டம், ‘இதயங்கள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து கை குலுக்குவோம்’ என்பது போல்தான் இருக்கும்”

என்று அவர் தெரிவித்துள்ளார்.