டில்லி

வரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மதுரையில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் வெறும் பெயர்ப்பலகையுடன் நின்று போனது  இதையொட்டி தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கேள்விகள் எழுப்பி வருகின்றது.  ஆயினும் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை 

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை, கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவு பெறும், திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டில் கூடுதலாக 700 கோடி ரூபாய் அதிகரித்தது ஏன், திமுக எம்.பி. வில்சன் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், அதற்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.

அந்த பதிலில் அமைச்சர்.

”எய்ம்ஸ் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் கட்டுமானம் உட்பட முன் முதலீட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.தகுதி வாய்ந்த ஏலதாரரக்ளுக்கு  முக்கிய பணிகளை மேற்கொள்ள டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.. 

வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் ஜப்பானைச் சேர்ந்த ஜிகா அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கடன் ஒப்பந்தத்தின்படி, வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் கட்டுமான பரப்பளவு அதிகரிப்பு போன்ற பணிகளால், திட்ட மதிப்பீட்டிற்கான செலவு 1,264 கோடி ரூபாயில் இருந்து 1,977 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது” 

எனத் தெரிவித்தார்.