சென்னை: பதிவுத்துறையில் நிர்வாக நடவடிக்கையாக,  மத்திய சென்னை கோவை உள்பட ஆறு மாவட்ட பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பதிவுத்துறை தலைமை அலுவலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழகத்தில் முழுவதும,  575 சார் -பதிவாளர் அலுவலகங்கள், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.  சில இடங்களில் பதிவு பணியிலும், பல இடங்களில் நிர்வாக பணியிலும், மாவட்ட பதிவாளர்கள் உள்ளனர்  இங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தின் பேரில், ஆண்டுதோறும் பொது பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பணிமாறுதல் கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால்,  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக,  இந்த ஆண்டு பணி மாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், 15 பேருக்கு மாறுதல் வழங்கி புதித்துறை உத்தரவிட்டு உள்ளது.  இதில்,  மத்திய சென்னை, நாமக்கல், திருவண்ணாமலை, செய்யார், கோவை, மதுரை மாவட்ட பதிவாளர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.