நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் , இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், நடிகர் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய்,ஆகியோர் மிகவும் நெருக்கமான நண்பர்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் நட்புக்கு இடைவெளி விழுந்துவிடக் கூடாது என ‘ஜூம்’ உள்ளிட்ட தளங்கள் மூலமாக வாரம் 2 முறை ஆன்லைனில் சந்தித்து பேசி வருகின்றனர்.

மிக விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படைப்பு ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.