Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா தமிழ் நாடு

மாணாக்கர்கள் மகிழ்ச்சி: சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

Jun 25, 2020

டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதன் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவ தாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ  12-ம் வகுப்பு, மற்றும்  மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளதால், தேர்வுகளை நடத்த பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையில்,  இந்த சூழலில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்றும், மாநில தேர்வுகளை போல சிபிஎஸ்இ தேர்வுகளையும்  ரத்து செய்ய வேண்டும் என ஒரு மாணவரின் பெற்றோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை  3 நீதிபதிகள் கொண்ட  அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின் போது,  மீதமுள்ள தாள்களுக்கான தேர்வுகளை  ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய கல்வி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்..
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை என்று அறிவுறுத்தி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அனைத்து சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Post navigation

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை காட்டும் புதிய செயற்கைக் கோள் படங்கள்
தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு… தமிழக காங்கிரஸ் மறுப்பு

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer