Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
இந்தியா தமிழ் நாடு

மாணாக்கர்கள் மகிழ்ச்சி: சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

Jun 25, 2020

டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதன் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவ தாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ  12-ம் வகுப்பு, மற்றும்  மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளதால், தேர்வுகளை நடத்த பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையில்,  இந்த சூழலில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்றும், மாநில தேர்வுகளை போல சிபிஎஸ்இ தேர்வுகளையும்  ரத்து செய்ய வேண்டும் என ஒரு மாணவரின் பெற்றோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை  3 நீதிபதிகள் கொண்ட  அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின் போது,  மீதமுள்ள தாள்களுக்கான தேர்வுகளை  ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய கல்வி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்..
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை என்று அறிவுறுத்தி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அனைத்து சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Post navigation

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை காட்டும் புதிய செயற்கைக் கோள் படங்கள்
தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு… தமிழக காங்கிரஸ் மறுப்பு

Related Post

தமிழ் நாடு

தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் நாடு

‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’! ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ் நாடு

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி! காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

உலகம்

உலகம்

கொரிய உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது நடவடிக்கை…

July 11, 2025 Sundar
உலகம்

ஆகஸ்ட் 1 முதல் கனடா மீது 35% வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

July 11, 2025 Sundar
உலகம்

மலேசிய மாடல் அழகியை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி தலைமறைவு…

July 10, 2025 Sundar
உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தம்…

July 9, 2025 Sundar
உலகம்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி மீண்டும் பணிக்கு திரும்பினார் ;

July 9, 2025 mullai ravi

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer